வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை

சென்னை,

வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக (மாலை 6 மணி நிலவரப்படி) சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மி.மீ.

* மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77 இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

* சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள்

* ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1368 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

* நேற்று (15.10.2024) காலை உணவு ஆயிரம் நபர்களுக்கும். மதிய உணவு 45 ஆயிரத்து 250 நபர்களுக்கும், இரவு உணவு 2 லட்சத்து 71 ஆயிரத்து 885 நபர்களுக்கும். இன்று (16.10.2024) காலை உணவு 4 லட்சத்து 12 ஆயிரத்து 725 நபர்களுக்கும். மதிய உணவு 4 லட்சத்து 53 ஆயிரத்து 750 நபர்களுக்கும் என மொத்தம் 11 லட்சத்து 84 ஆயிரத்து 410 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் இன்றும் (16.10.2024), நாளையும் (17.10.2024) பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

* சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

* நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6,963 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் தயாநிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மணலி எழும்பூர், செனாய் நகர் மற்றும் பள்ளிக்கரணையிலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் செனாய் நகர். 2 வில்லிவாக்கம் மற்றும் ராஜரத்தினம் அரங்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 60 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 100 வீரர்கள், மீட்புப் படகு இயந்திர ரம்பம், ஸ்டெக்சர் உள்ளிட்ட மீட்புகருவிகளுடன், மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.

* மழைக்காலத்தினை முன்னிட்டு. பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 204 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

சென்னை குடிநீர் வாரியம்

* கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள்

* மற்ற மாநகராட்சி / நகராட்சி / மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் எண்ணிக்கை 89

* பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் மசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

* சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன். கூடுதலாக 38 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி வரை 4,025 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

* பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 98 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் – வெளியான அறிவிப்பு

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ‘ரெட் அலர்ட்’ வாபஸ்

‘சார்’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது