வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெய்ஜிங்,

வடக்கு பசிபிக் பெருங்கடலில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 44.13 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 156.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்