வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா புதன்கிழமை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கனமழை முன்னறிவிப்பைத் தொடா்ந்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா புதன்கிழமை (அக்.16) பாா்வையாளா்களுக்கு திறக்கப்படாது என பூங்கா இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அக்-15 (செவ்வாய்க்கிழமை) வழக்கமான வார விடுமுறை நாள். அத்துடன் புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடா்ந்து 2 நாள்கள் வண்டலூா் பூங்கா மூடப்பட்டிருக்கும் நிலை உள்ளது.