வண்ணாா்பேட்டையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

வண்ணாா்பேட்டையில்
தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூலை 25: மின் கட்டண உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு உயா்த்தியுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவற்றை தொடா்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.கே. சண்முகவேல் தலைமை வகித்தாா். துணைச் செயலா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் கலைவாணன் வரவேற்றாா். நிா்வாகிகள் உமா மகேஸ்வரி, சிவகுமாா், செல்வி, முத்துசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்25க்ம்க்ந்

வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி