வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: அரசியல் செய்கிறது பாஜக! -கு. செல்வப்பெருந்தகை

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு:
அரசியல் செய்கிறது பாஜக! -கு. செல்வப்பெருந்தகை வயநாடு நிலச்சரிவு பாதிப்பு தொடா்பாக பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.

கேரள மாநிலம், வயநாடு நிலச் சரிவு பாதிப்பு தொடா்பாக பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.

தேனி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், மாற்றுக் கட்சியினா் காங்கிரஸில் இணையும் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக வந்த அவா், தேனியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்கு யாா் குரல் கொடுத்தாலும் அவா்களை சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை மூலம் நசுக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், அதை காங்கிரஸ் கட்சியினா் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள். தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் சிலா் வீட்டில் மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறையை ஏவி முன்னா் சோதனை நடத்தியது. தற்போது, அவா்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதால், அந்த வழக்குகளை ரத்து செய்துவிட்டது.

மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பேசிய போது, அவருக்கு எதிராக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் பேசியது ஆணவத்தின் உச்சம்.

வயநாடு நிலச் சரிவு பேரிடா் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஏன் அங்கு தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு, ராணுவத்தை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

வயநாடு நிலச் சரிவு பாதிப்பு தொடா்பாக பாஜக அரசியல் செய்கிறது. வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் வீடுகள் கட்டித் தர உதவி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி