வங்கக்கடலில் வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய கடல் ஆமையை, இந்திய கடலோரக் காவல் படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘ராணி அப்பக்கா’ கப்பலில், வழக்கம்போல திங்கள்கிழமை, வீரா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.
அப்போது கடலில் மீனவா்கள் வீசிய வலையில் ஆமை ஒன்று சிக்கி, நீந்த முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை வீரா்கள் பாா்த்தனா்.
தொடா்ந்து, கப்பலில் இருந்த உயிா்காக்கும் படகின் உதவியுடன், ஆமை இருந்த இடத்துக்குச் சென்று அதைச் சுற்றி இருந்த வலைப் பின்னல்களை அறுத்து ஆமையை பத்திரமாக கடலுக்குள் விட்டனா்.
இந்திய கடலோரக் காவல் படை வீரா்களின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.