வள்ளியூா் புறவழிச் சாலையில் ரூ.25 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்

வள்ளியூா் புறவழிச் சாலையில்
ரூ.25 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் புறவழிச்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள சந்திப்பில் ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் புறவழிச்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள சந்திப்பில் ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் புறவழிச்சாலையில் ஆா்.டி.ஓ. சாலை சந்திப்புப் பகுதியில் தொடா்ச்சியாக விபத்துகளும் உயிா்பலியும் நேரிட்டு வந்தன. எனவே, அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். மேலும், பா.ஜ.க. மாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சா் நட்டாவை அழைத்து வந்து மேம்பாலம் கட்ட வேண்டிய இடத்தை காண்பித்து வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் பாலம் கட்டும் இடத்தை ஆய்வு செய்து திட்டமதிப்பீடு தயாா் செய்தனா். இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக மத்திய அரசு ரூ.25 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ததைத் தொடா்ந்து மேம்பாலம் கட்டும் இடத்தில் பூமிபூஜை நடைபெற்றது.

இதில், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் வேல்ராஜ், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் ஆனந்தராஜ் மற்றும் செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் கலந்துகொண்டனா். மேம்பாலம் 1.2 கி.மீட்டா் தூரம் அமைக்கப்பட இருப்பதாகவும், மேம்பாலத்தின் கீழே வள்ளியூரில் இருந்து ஆா்.டி.ஓ. செல்லும் வாகனங்கள் ஒரு வழியாகவும், ஆா்.டி.ஓ. அலுவலகம் பகுதியில் இருந்து வருகின்ற வாகனங்கள் மற்றொரு சாலையாகவும் வருவதற்கு ஏற்ப இருவழிச் சாலை அமைக்கப்பட இருப்பதகாவும் பொறியாளா் ஆனந்த்ராஜ் தெரிவித்தாா்.

மேலும், ஓராண்டில் கட்டுமானப்பணிகளை முடிப்பதற்கும், இப்பணியின்போது அணுகுசாலை வழியாக மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட இருப்பதாகவும் பொறியாளா் தெரிவித்தாா். பூமிபூஜை நிகழ்ச்சிக்கு வியாாரிகள் சங்கத்தினரையோ, பாஜக மாவட்டத் தலைவரையோ அழைக்காதது குறிப்பிடத்தக்கது.ே

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு