விஜய், அஜித்தைவிட பெரிய நட்சத்திரம்…படம் ஓடாததால் நடிப்பை விட்ட நடிகர்

அவர் மீண்டும் நடிக்க வந்து வில்லனாக ரசிகர்களை கவர்ந்தார்.

சென்னை,

தமிழ் நடிகர்களைப் பற்றி பேசும்போது, நம் மனதில் உடனடியாகத் தோன்றும் முதல் இரண்டு பெயர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இருப்பினும் 90 களில், தமிழ் சினிமாவில் இருந்து மற்றொரு நடிகர் ஒருவர் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். அவர் விஜய், அஜித்தைவிட பெரிய நட்சத்திரமாக இருந்தார்.

இருப்பினும், திரைப்படங்களை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் திரைப்படங்களுக்குத் திரும்பினார். நாம் பேசுவது வேறுயாரும் இல்லை, அரவிந்த் சாமிதான்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான 'தளபதி' படத்தின் மூலம் அறிமுகமானார் அரவிந்த் சாமி. அதனைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 'ரோஜா' (1992) மற்றும் 'பாம்பே' (1995) படங்களில் நடித்தார். இவ்விரு படங்களும் தேசிய அளவில் வரவேற்பை பெற்றன.

1997-ம் ஆண்டு தேசிய விருது பெற்ற 'மின்சார கனவு' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் மேலும் உயர்ந்தார். அதே ஆண்டில், 'சாத் ரங் கே சப்னே'யில் ஜுஹி சாவ்லாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த படங்கள்' பாக்ஸ் ஆபிஸில் சரியாக செயல்பட தவறியது. இதனால், 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தினார். பின்னர் ஓய்வுக்கு பிறகு, 2013-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அதனைத்தொடர்ந்து, 'தனி ஒருவன்', 'போகன்' போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2021 ம் ஆண்டில், 'தலைவி' படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனாக நடித்து, பாலிவுட்டிற்கும் மீண்டும் திரும்பினார்.

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி