வின்ஸ்டன் சலேம் ஓபன்; தக்சினேஷ்வர் சுரேஷ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

வின்ஸ்டன் சலேம்,

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர் சுரேஷ் – பிரிட்டனின் லூகா பவ் இணை, ஈகுவடாரின் கோன்சாலோ எஸ்கோபார் – கஜகஸ்தானின் அலெக்சாண்டர் நெடோவியோவ் இணை உடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய தக்சினேஷ்வர் சுரேஷ் இணை, 2வது செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட தக்சினேஷ்வர் சுரேஷ் இணை 10-8 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் நெடோவியோவ் இணையை வீழ்த்தியது. இதன் மூலம் தக்சினேஷ்வர் சுரேஷ் – லூகா பவ் இணை அரையிறுதிக்கு முன்னேறியது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா