விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் வெள்ளிக்கிழமை (அக். 18) மாலை 6.30 மணியளவில் மிதிவண்டியில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் எதிரே வந்த பேருந்து, மங்கனி ராம் மீது மோதுவதுபோல் வந்துள்ளது.

ஆனால், விபத்தை தடுக்கும்விதமாக பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை திருப்ப முயன்றதில் அருகிலிருந்த வடிகாலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மங்கனி ராம், பேருந்தில் பயணித்த இருவர் என 3 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், பேருந்தில் சிக்கியிருந்த 51 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிக்க: உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity