விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

3வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் ஜோகோவிச் , ஆஸ்திரேலியா வீரர் பாபிரின் ஆகியோர் மோதினர்

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் ஜோகோவிச் , ஆஸ்திரேலியா வீரர் பாபிரின் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3,6-4, 7(7)-6(3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி