விளையாட்டு வினையானது… 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி… மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!
3வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே டோம்பிவலி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அதேபோல் அங்கு குடியா தேவி என்பவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், குடியா தேவி அந்த குடியிருப்பின் 3வது மாடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பணியின் இடையே மூன்றாவது மாடியின் பால்கனி சுவற்றில் அமர்ந்துள்ளார். அப்போது உடன் பணிபுரியும் பூந்தி என்பவர் விளையாட்டாக அவரது தோளில் கை வைத்து அழுத்தினார்.
விளம்பரம்
இதனால் சமநிலை இழந்த குடியா தேவி மாடியில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தவறி கீழே விழுந்தார். மேலும் பூந்தியும் அங்கிருந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் அவர் சற்று சுதாரித்துக்கொண்டு மாடியில் பாதியில் தொங்கு தப்பித்தார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு… முக்கிய அம்சங்கள் என்ன?
இந்நிலையில், மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த குடியா தேவி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குடியா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விளம்பரம்
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த குடியா தேவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Crime News
,
Mumbai