வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், 2 கிலோ வெள்ளி திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், 2 கிலோ வெள்ளி திருட்டு

பொன்னேரி, ஆக.1: பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை 2 கிலோ வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தில் வசித்து வருபவா் சுமதி (49). இவா் அப்குதியில் சிறுகடை ஒன்று நடத்தி வருகிறாா். இவரது மகன் சென்னையில் வசித்து வருகிறாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுமதி கும்பகோணம் சென்றிருந்தாா். இந்த நிலையில் மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் சேமிப்புக்காக வைத்திருந்த உண்டியல் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு