வூஹான் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா

வூஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

பீஜிங்,

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜெங் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார். இதில் 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி சபலென்கா தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Third time's the charm! Thank you @wuhanopentennis for all of the love and support during this past week pic.twitter.com/fCJsyurOWr

— Sabalenka Aryna (@SabalenkaA) October 13, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்