‘வேட்டையன்’ படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு – இன்று விசாரணை

'வேட்டையன்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வருகிற அக்டோபர் 10-ம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள, இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிலையில், 'வேட்டையன்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்க அல்லது மியூட் செய்ய வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Original Article

Related posts

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தில் இணைந்த சாந்தினி சவுத்ரி

ஆர்.ஜே பாலாஜியின் ‘சொர்கவாசல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியான படங்கள் – 13.10.24 முதல் 19.10.24 வரை