வேட்டையன் முதல் பாடலை பாடியது யார்?

வேட்டையன் படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோட் ரூ. 200 கோடி வசூல்!

இந்த நிலையில், அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் நாளை (செப்.9) வெளியாகிறது. அதற்கான கிளிம்ஸ் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதேநேரம், இப்பாடலைப் பாடியது யார்? என்கிற கேள்வியை தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளது. பாடலின் புரமோவைக் கேட்கும்போது மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் குரல்போல் இருக்கிறது.

பல ரஜினி படங்களுக்கு முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி. என்பதால் அந்த நினைவைத் தொடர வேட்டையன் படத்திலும் ஏஐ மூலம் அவர் குரலைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!