ஹிந்தியில் அறிமுகமாகும் சூர்யா!

நடிகர் சூர்யாவின் பாலிவுட் படம் குறித்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது.

தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவ.14ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:ஜெயம் ரவியின் 34ஆவது படம் அறிவிப்பு!

இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா 44 படப்பிடிப்பு நிறைவடையும். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படப்பிடிப்பு இருக்கிறது. அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ இந்த ஹிந்திப் படம் என்பது இன்னும் முடிவாகவில்லை.

சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஐஐஎஃப்ஏ விழாவில் ஹிந்திய் இயக்குநரிடம் சூர்யா படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ், “100 சதவிகிதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இயக்குநராக வனிதா..! டிரெண்டிங்கில் படத்தின் புரோமோ!

கர்ணா என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல்.

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பாக் மில்கா பாக், தூஃபான் போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர்.

Karna pic.twitter.com/99egmnUN1d

— rocket Raja (@rocket_raja111) October 4, 2024

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!