சினிமா உலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை.. மௌனம் காக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்
இந்திய திரையுலகையே உலுக்கிய மலையாள சினிமாத்துறையின் பாலியல் விவகாரம் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மவுனம் காத்துவருகின்றனர்.
மல்லுவுட் எனப்படும் எனப்படும் மலையாள சினிமாத்துறையில், பாலியல் உறவுக்கு ஒத்துழைக்கும் நடிகைகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதாக , ஹேமா கமிட்டி கேரள அரசிடம் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் இருந்ததாக நடிகைகள் ராதிகா, குட்டி பத்மினி, ஷகிலா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
விளம்பரம்
மலையாள சினிமாத்துறையினர் மீதான ஹேமா கமிட்டியின் அறிக்கை பற்றி மட்டுமன்றி, தமிழ் நடிகைகளின் குற்றச்சாட்டு குறித்தும் முன்னணி நடிகர்கள் மவுனம் காக்கின்றனர். இந்திய சினிமாவையே உலுக்கியுள்ள பாலியல் புகார்கள் குறித்தும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் தனக்கு தெரியாது என நழுவினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நடிகர் ஜீவாவோ ஒரு படி மேலே போய், ஹேமா கமிட்டி குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் சாடினார். பாலியல் துன்புறுத்தல்கள் சினிமா மட்டுமின்றி உலகின் அனைத்து துறைகளிலும் உள்ளதாகக் கூறியுள்ள நடிகர் அர்ஜூன் , அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும் என அட்வைசும் கொடுத்தார்.
விளம்பரம்
இதையும் படிக்க:
நடிகர் ஜீவாவிற்கும் பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் – என்ன நடந்தது?
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து முன்னணி நடிகர்கள் குரல் எழுப்ப வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி வலியுறுத்தினார். இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தைரியம் உள்ளவர்கள் கைகொடுக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் வலியுறுத்தியுள்ளார்.
திரைப்படங்களில் பெண்களின் பிரச்னைகளை கண்டு பொங்கி எழும் ஹீரோக்கள் நிஜத்தில், ஆதரவு குரல் கூட கொடுக்காமல் நழுவிச் செல்வதாக விமர்சனங்கள் எழுகின்றன. நடிகர்களின் இந்த போக்கு பலரையும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Actor Arjun
,
Actor Jeeva
,
Hema Committee
,
Hema Committee Report