15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்தார்.

அங்கு விவசாய கூலி வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை பெரியசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

பென்னாகரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலுக்கு நிதி ஒதுக்கியது திமுக வா?, பாமக வா? – பாமகவினர் தர்ணா