15 விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

15 விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் – ஈரோடு இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயிலில் 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளன. ஈரோட்டில் இருந்து ஜன.20-ம் தேதி முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.23-ம் தேதி முதலும் கூடுதல் பொது பெட்டி சேர்க்கப்படும்.

இதுபோல, ஜன.16 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் – ஹைதராபாத், நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா, மைசூரூ, பாலக்காடு விரைவு ரயில் உட்பட 14 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படவுள்ளன. அதேநேரத்தில், 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்