17 வயது சிறுவன் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா – நெல்லையில் பரபரப்பு

மேடை கச்சேரி நிகழ்ச்சியில் பாட வந்தபோது, இளம்பெண்ணுக்கும், சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று காலை 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த நிலையில், அந்த வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. இதனால் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த இளம்பெண் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்றும், மேடை கச்சேரி பாடகி என்பதும் தெரியவந்தது. சமீபத்தில் சந்திப்பு பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பாட வந்தபோது, அந்த இளம்பெண்ணுக்கும், சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். பின்னர் அந்த சிறுவன், இளம் பெண்ணுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் அவனை தொடர்பு கொள்ள முடியாத ஆத்திரத்தில் அந்த இளம்பெண், சிறுவனின் வீட்டு முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி