2-வது டி20 போட்டி: துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் ஏன் இடம்பெறவில்லை..? சூர்யகுமார் விளக்கம்

இந்தியா – இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக குசால் பெராரே 53 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி இந்திய களமிறங்கும் தருணத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் 2-வது இன்னிங்சை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதையடுத்து ஆட்டம் வெகு நேரம் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 8 ஓவர்களில் 78 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 6.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 81 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 30 ரன்கள் அடித்தார்.

முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் 11-ல் இடம்பெறுவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அதற்கான காரணம் குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "இன்று (அதாவது நேற்று) சுப்மன் கில் கழுத்து பிடி வலியால் அவதிப்படுகிறார். எனவே அவருக்கு பதிலாக சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா