20 வருடங்களுக்குப் பிறகு அண்ணன், தங்கையை சேர்த்த இன்ஸ்டாகிராம் ரீல்கள்

20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த அண்ணன் தங்கை…சேர்த்து வைத்த ரீல்ஸ்

20 வருடங்களுக்கு பின்பு இணைந்த அண்ணன் தங்கை

இன்ஸ்டாகிராம் ரீலால் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த சகோதர, சகோதரி மீண்டும் இணைந்துள்ள சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று கான்பூரில் நடைபெற்றது. இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து சகோதரனின் உடைந்த பற்களை அடையாளம் கண்ட சகோதரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் ரீல்களை உருவாக்குவதிலும், அனைவரின் கவனங்களை ஈர்ப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கான்பூரின் நர்வால், கங்ககஞ்ச் பகுதியில் வசிக்கும் ராஜ்குமாரி இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து தனது சகோதரனை அடையாளம் கண்டுகொண்டார்.

விளம்பரம்

20 ஆண்டுகளுக்கு முன்பு, பால் கோவிந்த் அவர்கள் வேலைக்காக மும்பைக்கு சென்றார், அதன் பிறகு அவர் திரும்பவேயில்லை. அப்போது அவருக்கு வயது 15. மும்பையை அடைந்த அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை பார்க்க தொடங்கினார். ஆரம்பத்தில் தனது நண்பர்களுடன் தொடர்பில் இருந்த அவர், படிப்படியாக அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு அவரது நண்பர்கள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கே திரும்பினர், ஆனால் பால் கோவிந்த் மும்பையிலேயே இருந்தார்.

விளம்பரம்

இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வீட்டிற்கு திரும்பு ரயிலில் ஏற முடிவு செய்தபோது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. தவறான ரயிலில் ஏறியதால் அவர் கான்பூருக்குப் பதிலாக ஜெய்ப்பூருக்கு சென்றடைந்தார். அந்த நோய் ஒருவித மனநலக் கோளாறுடன் தொடர்புடையதாக இருந்ததால், எல்லாவற்றையும் மறந்து, எதையும் புரிந்து கொள்ள முடியாமல் ஜெய்ப்பூரில் அலைந்து திரிந்தார்.

இந்தியாவின் முதல் புராட்டஸ்டன்ட் சர்ச்… எங்கு உள்ளது தெரியுமா.?
மேலும் செய்திகள்…

சோர்வடைந்து, நிலைகுலைந்து போன பால் கோவிந்த், ரயில் நிலையத்தில் ஒருவரைச் சந்தித்தார், அவருடைய உதவியால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பால் கோவிந்தனுக்கு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. எனவே அவர் ஜெய்ப்பூரில் வாழ்க்கையை நடத்த தொடங்கினார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில் சமீபத்தில் ராஜகுமாரி சமூக வலைதளங்களில் ரீலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உடைந்த பற்கள் மற்றும் வளைந்த விரல்களுடன் பால் கோவிந்தின் ரீலைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அவர் தன் சகோதரன் என்பதை உடனே அடையாளம் கண்டுகொண்டாள். அதன் பிறகு ராஜகுமாரி தனது சகோதரரிடம் போனில் பேசினார். இருவரும் தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஒருவரை ஒருவர் பார்த்ததும் அழ ஆரம்பித்தார்கள்:

பால் கோவிந்த் தனது சகோதரியைச் சந்திக்க கான்பூரை அடைந்தபோது, ​​சகோதரனும் சகோதரியும் ஒருவரையொருவர் பார்த்து அழத் தொடங்கினர். காணாமல் போன தனது அண்ணன் திரும்பி வர வேண்டும் என்று பல வருடங்களாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்த ராஜகுமாரியின் ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது.

விளம்பரம்

உடைந்த பற்களால் அடையாளம் காணப்பட்டது:

தான், இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உடைந்த பற்கள் மற்றும் வளைந்த விரல்களுடன் இருந்த பால் கோவிந்தைப் பார்த்ததும், தனது சகோதரர் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் ராஜ்குமாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Instagram
,
News On Instagram

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்