3,000-க்கும் அதிக திரைகளில் கங்குவா!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எது உண்மையான வெற்றி? நாயகன் எஸ்.ஜே.சூர்யா..! வெற்றி விழாவில் நானி பேசியதாவது?

கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திட்டமிட்ட தேதிக்கு வெளியிடாமல் ரஜினி படத்தைப் பார்த்து பயப்படுவதா? என தகாத வார்த்தைகளாலும் திட்டி பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

முதலில் அக்.10 வெளியாகவிருந்தது. வேட்டையன் படம் வரவே ஞானவேல்ராஜா ரஜினி ரசிகர் என்பதால் வேறு நாளில் வெளியாக திட்டமிட்டுள்ளார். ஹிந்தியில் மல்டிபிளக்ஸில் கங்குவா வெளியாகவுள்ளது. 3000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவிருக்கிறது.

வேட்டையன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வட இந்தியாவில் மாபெரும் ரிலீஸ்

வட இந்தியாவில் ஓடிடியில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாகும். தமிழ்ப் படங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்காததால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகுவதில்லை. ஆனால், கங்குவா மிகப்பெரிய ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இன்னும் 2 மாதங்களில் கங்குவா ரிலீஸ் ஆகும். ஹிந்தியிலும் வெளியாகுவதால் அதற்கும் ஏற்றவாறு ரிலீஸ் தேதியை அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்றார்.

27 years of persistence, commitment and dedication with which you’ve carved a niche of unparalleled excellence
Congratulations on completing 27 years in the industry #Suriya sir. Here’s to soaring higher ️
Wishes from Team #Kanguva#27YearsOfSuriya#27YearsOfSuryaism… pic.twitter.com/UYIE349cux

— Studio Green (@StudioGreen2) September 6, 2024

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா