நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தைத் தொடர்ந்து குட் பேட் அக்லியில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில், மூன்று வித்தியாசமான தோற்றங்களில் அஜித் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளன.
இதையும் படிக்க: மும்பை ரசிகர்களுடன் சூர்யா!
இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என கேள்விகள் எழுந்த நிலையில், அஜித்தின் 64-வது படத்தை இயக்குநர் சிவாவும் அதற்கு அடுத்த படத்தை இயக்குநர் பிரசாந்த் நீலும் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கங்குவா படத்திற்கான புரமோஷன் நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குநர் சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக நடிகர் அஜித்துடன் இணைய உள்ளதை மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தின் இயக்குநரான பிரசாந்த் நீல் – அஜித் கூட்டணி இணையவுள்ளதாக சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.