விஜய்யின் ’கோட்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே செப். 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் 50 நாள்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் கோட் பட வசூல் நிலவரம் குறித்து படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.
உலகம் முழுதும் கோட் படம் ரூ. 455 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன், ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கோட் வெளியானது. இருந்தபோதிலும், திரையரங்குகளிலும் கோட் படம் குறைவான காட்சிகளுடன் திரையிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விரைவில் கோட் ரூ. 500 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.