6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை… தெலங்கானாவில் நடந்த கொடூரம்

6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை… தெலங்கானாவில் நடந்த கொடூர சம்பவம்!

தெலங்கானாவில், ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே அரிசி ஆலையில் கூலி வேலை செய்துவரும் தம்பதி, வியாழக்கிழமை இரவு தங்களது 2 குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு 12 மணியளவில் எழுந்து பார்த்தபோது அவர்களுடைய ஆறு வயது மகளை காணாதநிலையில், காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க : போக்சோ வழக்கில் சிக்கி ஆஜராகாத எடியூரப்பா… பிடிவாரண்டை பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

விளம்பரம்

தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே அரிசி ஆலையில் வேலைசெய்யும் பலராம் என்ற நபர் சிறுமியை தூக்கிச்சென்றது தெரியவந்தது. சிறுமியை தூக்கிச் சென்ற பலராம், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து பலராமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Girl Murder

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?