7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்… அதிர்ச்சி சம்பவம்

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்… உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் 7 குழந்தைகள் உட்பட 8 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஓநாய்களில், ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓநாய் கூட்டங்களால் சுமார் 30 கிராம மக்கள் தூக்கமின்றி தவித்தனர். இந்நிலையில், ஓநாய்களைப் பிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கிராமத்திற்குள் 2 ஓநாய்கள் திரிவது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க:
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை… மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சஸ்பெண்ட்!

இந்நிலையில், வனத்துறையினர் வைத்த கூண்டில் ஓநாய் ஒன்று சிக்கியுள்ளது. 30 கிராம மக்களை அச்சுறுத்திய ஓநாய்களில், எஞ்சியவற்றை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
uttar pradesh

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!