சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை, அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்,, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறித்துள்ளார்.