சென்னையில் நள்ளிரவில் மின்தடை: மக்கள் கடும் அவதி!

சென்னை: மணலி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை(செப்.12) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் மின் தடையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முக்கிய சாலைகளிலும் மின் விளக்குகள் எரியாததால் வாகன் ஓட்டிகள் அவதி.

சீரான மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்