தமிழகத்தில் செப். 16 வரை மழை தொடரும்!

தமிழகத்தில் ஒருசில இடங்களில் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரோன் தாக்குதல் எதிரொலி: மணிப்பூரில் ஊரடங்கு அமல்!

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!