ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் பெய்த கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

இதுகுறித்து உஜ்ஜையின் மாவட்ட குற்றவியல் நீதிபதி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மஹாகல் லோக் பகுதியின் கேட் எண் 4-க்கு அருகில் அமைந்துள்ள மஹராஜ்வாடா பள்ளியின் ஒரு பகுதி எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் இந்தச் சம்பவம் நடந்தது.

சிக்கிமில் கனமழை: கடும் நிலச்சரிவால் பாலங்கள் உடைந்தன!

மஹாராஜ்வாடா பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் ஒரு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலியாகினர். 2 பெண்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், “உஜ்ஜையினியில் உள்ள மகாகல் கோயிலின் கேட் எண் 4 அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

State Prepares ₹1,670 Crore Plan For 1,200 Hi-Tech Fast Response Vehicles, Awaits Cabinet Approval

Overhaul: Major Surgery Likely In Police Dept Amid Rising Crime Rate; Commissioners Of Bhopal & Indore May Be Shifted